குரும்பூர் தசம திருப்பதி அருள்மிகு ஆதிநாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிகிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் பெருமாளுக்கு அலங்கார தீபாராதனை, ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ ஆதிநாராயணப்பெருமாள், ஸ்ரீகருடன், ஸ்ரீஅஞ்சநேயர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இரவில் கருட சேவை வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ ஆதிநாராயண பெருமாள் கைங்கர்ய சபா தலைவர் கிசோக் முருகானந்தம் செய்திருந்தார்.