சாத்தான்குளத்தில் உலக அமைதி தினம்

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 

சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் சிகரம் அறக்கட்டளை சார்பில் உலக அமைதி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு, ஓய்வுபெற்ற   வட்டாட்சியர்  நடராஜன் தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற அஞ்சலக அதிகாரிகள் அனந்த கிருஷ்ணன், கோயில்ராஜ், மரியரூபன், சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவியாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், உறுதிமொழி எடுக்கப்பட்டது. அமைதிக்கான பிரார்த்தனை செய்யப்பட்டது. இதில், முத்துபாண்டி, சிவலிங்கம், முத்துராமலிங்கம், ஜெயசீலன், சுப்பிரமணியன், முத்து, துரை, அங்கப்பன், ஜோசப்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிகரம் இயக்குநர் முருகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com