அத்தியடிதட்டு கோயிலில் 108 பால்குட ஊர்வலம்
உடன்குடி அருகே அத்தியடிதட்டு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயில் கொடை விழாவையொட்டி 108 பால்குட ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி , காலை 8 மணிக்கு வில்லிசை, 9 மணிக்கு பழையகாயல் மூவாற்றங்கரை பகுதியில் இருந்து புனித நீர் எடுத்து வருதல் நடைபெற்றது. முற்பகல் 11 மணிக்கு அருள்மிகு தூத்துவாலை ஐய்யனார் கோயிலில் இருந்து 108 பால்குட ஊர்வலம் தொடங்கியது. இதனை முன்னிட்டு தூத்துவாலை ஐய்யனார், ஆள்சாமி, பேச்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு பால், பன்னீர், பழம், விபூதி, இளநீர் உள்பட பல்வேறு வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகல் 1.30 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 7.30 மணிக்கு 1008 அகல் விளக்கு வழிபாடு, தீபாராதனை, நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையைத் தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. புதன்கிழமை(செப்.25) காலை 9 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து உச்சிகால பூஜை, மஞ்சள் நீராட்டு, அலங்கார பூஜை ஆகியவை நடைபெறும். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துவருகின்றனர்.