ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பரவலாக மழை பெய்தது.
ஆறுமுகனேரி மற்றும் காயல்பட்டினம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி வரை பெய்தது. நீண்ட நாள்களுக்கு பின்னர் பெய்த இந்த மழையினால் இப்பகுதியில் வெப்பம் தணிந்தது. மேலும் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் நீர் தேங்கியது .ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி இம்மழை காரணமாக நிறுத்தப்படுமென உப்பு உற்பத்தியாளர்கள் கூறினர். உப்பு அம்பாரங்களை மூடி பாதுகாக்கும் பணியை உற்பத்தியாளர்கள் தீவிரப்படுத்தினர். இம்மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆறுமுகனேரி அடுத்துள்ள சாகுபுரத்தில் 24.5 மிமீ , காயல்பட்டினத்தில் 18 மிமீ மழையும் பதிவானது.