இடையன்விளையில் அகிலத்திரட்டு திருஏடு வாசிப்பு திருவிழா

இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டுதிரு ஏடுவாசிப்பு திருவிழா  நடைபெற்றது.

இடையன்விளை அய்யா வைகுண்டசாமி பதியில் அகிலத்திரட்டுதிரு ஏடுவாசிப்பு திருவிழா  நடைபெற்றது.
நாசரேத் அருகே உள்ள இடையன்விளை அய்யா வைகுண்டசாமிபதியில் அகிலத்திரட்டு திருஏடுவாசிப்பு திருவிழா கடந்த     13 ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெற்றது.  விழாவை முன்னிட்டு தினமும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் , அன்னதர்மமும் நடைபெற்றது.  சாமித்தோப்பு முத்துநாயகம் குழுவினர் திருஏடுவாசித்தனர். 8 ஆம் திருநாள் அன்று  இரவில் திருக்கல்யாண ஏடுவாசிப்பு, கல்யாண ஊர்வலம் ஐயன்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். 10 ஆம் திரு நாளன்று  பட்டாபிஷேகம், திருவிளக்குபூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.  இந்த பதியில்  ஒவ்வொரு வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்  2 மணிக்கு  அய்யாஅருள் வாக்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com