சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்திற்கு தமிழக அரசின் தொழிற்சாலைகளுக்கான மாநில பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
டிசிடபிள்யூ நிறுவனத்திற்கு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில் தமிழக அரசின் தொழிற்சாலைகளுக்கான மாநில பாதுகாப்பு விருதுகள்2016 பிரிவு ஏயின் கீழ் "விபத்தில்லா நீண்ட கால அளவு' திட்டம் 3 இன் கீழ் முதல் பரிசாக மாநில பாதுகாப்பு விருது மற்றும் அதற்கான சான்றிதழ் சென்னையில் நடைபெற்ற நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசு முதன்மைச் செயலர் தீரஜ்குமார் ஆகியோரிடமிருந்து டிசிடபிள்யூ நிறுவனத்தின் பாதுகாப்புத்துறை அதிகாரி ஆல்விஸ் கிப்ட் இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.