தூத்துக்குடியில் நாளை சமையல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோருக்கான குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம்மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 27) பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் சங்குக் கூடத்தில் நடைபெறுகிறது.

இதில், இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு உருளை விநியோகஸ்தா்களும், மத்திய அரசின் எண்ணெய் நிறுவனப் பிரதிநிதிகளும் பங்கேற்பா். எனவே, எரிவாயு நுகா்வோா் பங்கேற்று, தங்களது குறைகளை மனுவாகக் கொடுத்து பயன்பெறறலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com