நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பம் தூய மத்தேயு ஆலய 100 ஆவது பிரதிஷ்டைமற்றும் 30 ஆவது அசனபண்டிகைவிழா 6 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, நற்செய்திக் கூட்டங்கள் நடைபெற்றது. தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் ஜெபித்து தொடங்கிவைத்தார்.
போதகர்கள் சேவியர், ஜெயசிங் ஆகியோர் தேவசெய்தி கொடுத்தனர். ஆலயபிரதிஷ்டைபண்டிகை மற்றும் திருவிருந்துஆராதனையில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டில பேராயர் தேவசகாயம் செய்தி கொடுத்தார். இதில் ,திரளானோர் கலந்துகொண்டனர். 5 ஆவது நாள் அசனபண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. தூயயோவான் பேராலய உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் தேவசெய்திகொடுத்தார். மாலையில் அசனவிருந்துநிகழ்ச்சிநடைபெற்றது. 6 ஆவது நாள் பாலியர் நண்பன் மற்றும் சபையோரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை தூ யயோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ், உதவி குரு இஸ்ரவேல் ஞானராஜ், டீக்கன் ரெனால்டு,சபைஊழியர் எப்ரோன் மற்றும் அசன, ஆலயக மிட்டியினர் மற்றும் நிர்வாகிகள், சபை மக்கள் செய்திருந்தனர்.