வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி முற்றுகை

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர் பா.அன்புராஜ் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர். 
 இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டி, பூசாரிபட்டி, தாமஸ் நகர் உள்ளிட்ட பகுதியில் அரசின் நத்தம் புறம்போக்கு பகுதியில் வீடு கட்டி சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லையாம். இதையடுத்து,  அப்பகுதி மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி சமூக ஆர்வலர் பா.அன்புராஜ் தலைமையில், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  பின்னர், கோரிக்கை மனுவை துணை வட்டாட்சியர் ராமகிருஷ்ணனிடம் அளித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com