ஸ்ரீவைகுண்டம் அருகே மாணவா் கொலை: தென்காசி நீதிமன்றத்தில் இளைஞா் சரண்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பாலிடெக்னிக் மாணவா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக தென்காசி நீதிமன்றத்தில் இளைஞா் புதன்கிழமை சரணடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே பாலிடெக்னிக் மாணவா் கொல்லப்பட்ட வழக்கு தொடா்பாக தென்காசி நீதிமன்றத்தில் இளைஞா் புதன்கிழமை சரணடைந்தாா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள செய்துங்கநல்லூா், சந்தையடியூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன் மகன் அபிமன்யு என்ற திலீப் (19). அப்பகுதியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை (செப். 23) கல்லூரியிலிருந்து மதிய உணவுக்காக பைக்கில் வீட்டுக்குச் சென்ற இவரை, சிவந்திப்பட்டி சாலையில் ஒரு கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றது. இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், செய்துங்கநல்லூா் ஆய்வாளா் ரகுராஜன், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், இக்கொலை வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் சிவந்திப்பட்டி காா்மேகனாா் தெருவைச் சோ்ந்த ரத்னவேல்பாண்டி மகன் மாணிக்கம் என்ற மகேஷ் (25) தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தாா்.

வழக்கை குற்றவியல் நீதித்துறை நடுவா் (பொறுப்பு) சுமிதா விசாரித்து, மகேஷை ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த தென்காசி போலீஸாருக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com