ஆறுமுகனேரி சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி அருள்மிகு சந்தன மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.

ஆறுமுகனேரி அருள்மிகு சந்தன மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலையில் சிறப்பு அபிஷேகம், இரவு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை மாலையில் சிறப்பு அபிஷேகம், இரவு மாக்காப்பு அலங்காரம், குடியழைப்பு ஆகியவை நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை காலை அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலிலிருந்து பால் குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. நள்ளிரவு சாமக்கொடை, சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலையில் படைப்பு தீபாராதனை, கும்பம் வீதியுலா, மஞ்சள் நீராடுதல் ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com