ஆறுமுகனேரியில் தசரா குடில்களில் (பிறைகளில்) சனிக்கிழமை காளி பூஜை நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி கோயிலில் காளி பூஜை நடைபெற்றது. ஆறுமுகனேரியில் பல்வேறு தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தசரா குடில்களில் காளி பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. இதில், தசராவுக்கு விரதம் கடைப்பிடிப்பவர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.