திருச்செந்தூரில் கல்லூரி மாணவர்களுடன் தெலங்கானா ஆளுநர் கலந்துரையாடல்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார்.இதில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசியதாவது:


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்றார்.
இதில் மாணவர்கள் மத்தியில் ஆளுநர் பேசியதாவது:
கிராமத்து மாணவர்களை சந்திப்பது இனிமையான அனுபவம். கல்லூரி வாழ்க்கை மிகவும் உன்னதமானதும், மகிழ்ச்சியானதும்கூட. தன்னலமற்ற உழைப்பும், முயற்சியும் இருந்தால் நாம் வெற்றி பெற முடியும். வாழ்க்கை சூழலுக்கேற்ப நாம் வளைந்து நெளிந்து போனால் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது என்பதையே இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. துன்பங்கள் பாறைகளாகவும், முயற்சி அதில் மோதும் அலைகளைப் போலவும் இருக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் ஆளுநரின் கணவர் டாக்டர் செளந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் மகேந்திரன் வரவேற்றார். கல்லூரி செயலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com