நடிகர் விஜய் பேச்சுக்கு அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனத் தெரியவில்லை என்றார் அவரது தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர்.
தூத்துக்குடியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: சென்னையில் அண்மையில் நடைபெற்ற பிகில் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், தமிழகத்தில் அனைவரும் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்களோ, அந்த விஷயத்தைப் பற்றிதான் நடிகர் விஜய் பேசினார். பதாகை விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டோரை ஏன் கைது செய்யவில்லை என நீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் ஏன் தமிழக அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர் என்றுதான் தெரியவில்லை. மேடைப் பேச்சை வைத்து, வரும் பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் களம் இறங்குவதாக நான் நினைக்கவில்லை என்றார் அவர்.