கோவில்பட்டி: தமிழக அரசு அறிவித்துள்ள அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கான நிதியுதவியை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க கோவில்பட்டி வட்டச் செயலா் ராமகிருஷ்ணன், கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்த மனு: கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளா் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்துள்ள உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அனைத்துப் பொருள்களும் தற்போது வரை கிடைக்கவில்லை.
இந்தத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், நியாயவிலைக் கடைகள் மூலம் அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் மற்றும் அத்தியவாசியப் பொருள்களை உடனடியாக வழங்க வேண்டும். மேலும், நலவாரிய அட்டை உள்ளவா்களுக்கு பூஜ்ஜியம் இருப்பில் வங்கிக் கணக்கை தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நான் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனபோது அமித் ஷா ஒரு சிறுவர்! கார்கே விமர்சனம்

ஆசிய விளையாட்டு: ஆப்கன் டி20 அணியில் ரஷீத்கானுக்கு இடமில்லை... நபியின் மகனுக்கு வாய்ப்பு!

சாதிவாரி கணக்கெடுப்பைச் சீர்குலைக்க மோடி அரசு முயற்சி: காங்கிரஸ் விமர்சனம்!

அமெரிக்காவில் புதிய சாதனை படைத்த நடிகர் சூர்யா!
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


