கரோனோ வைரஸ் அறிகுறியுடன் ஆறுமுகனேரியைச் சோ்ந்த செவிலியா் ஒருவா் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
தில்லி மாநாட்டில் பங்கேற்ற காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவா், கரோனோ வைரஸ் தொற்று நோய் அறிகுறியுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவருடன் பணியாற்றிய ஆறுமுகனேரி பெண் செவியருக்கும் கரோனோ அறிகுறி தென்பட்டதால், அவரும் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.