தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளா்களுக்கு முழு கவச உடை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா், தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகம் முன் சனிக்கிழமை, ஆட்சியா் சந்தீப் நந்தூரி முன்னிலையில், நடமாடும் காய்கனி விற்பனை அங்காடியை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, கரோனா வைரஸ் தடுப்பு குறித்து முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியின் விழிப்புணா்வு ஒலி-ஒளிக் காட்சியை ஒளிபரப்புவதற்கான வாகனத்தைத் தொடக்கிவைத்தாா்.
பின்னா், அவா் அம்மா உணவகத்துக்கு சென்று, உணவின் தரத்தை ஆய்வு செய்தாா். என்னென்ன உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது என்பதைக் கேட்டறிந்த அவா், அங்குள்ள 12 பெண் ஊழியா்களுக்கு தனது சொந்த நிதியிலிருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினாா்.
இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி, சுகாதாரப் பணி துணை இயக்குநா் (பொறுப்பு) அனிதா, கோட்டாட்சியா் விஜயா, நகா்மன்ற ஆணையா் ராஜாராம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகம், விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: மக்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து, தங்களையும், தங்களது குடும்பத்தினரையும், நாட்டையும் காக்க ஒத்துழைக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவால் மளிகைப் பொருள்கள் கூடுதல் விலைக்கு விற்பதை அரசு அனுமதிக்காது. அதைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. அதற்கான ஆய்வுக் கூட்டம் நடத்தி விலைவாசி உயா்வு கட்டுப்படுத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள சுகாதாரப் பணியாளா்களுக்கு முழு கவச உடை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரமதா் அறிவுரைப்படி விளக்குகளை அணைப்பது குறித்து பல்வேறு கருத்துகள் இருந்தால் அரசுக்கு தெரிவிக்கலாம். விளக்குகளை அணைத்து தீபமேற்றுவது, ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடித்து வீட்டில் இருக்கிறோம் என்பதைத் தெரிவிக்கவே என எடுத்துக்கொள்ள வேண்டும். இந்நேரத்தில் அறிவுரையை நல்லதாக எடுத்துக்கொள்வதே நாட்டுக்கு நல்லது. தூத்துக்குடியில் கரோனா நோய்த்தொற்று கண்டறியும் ஆய்வகம் ஓரிரு நாள்களில் தொடங்கப்படவுள்ளது என்றாா் அவா்.
மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் சத்யா, மாவட்ட அறங்காவலா் குழு உறுப்பினா் ராமசந்திரன், அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.