தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் அரசு மருத்துவமனை, ஈட்டுறுதி மருத்துவமனை தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்தப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, ஆசிரியா் கூட்டணி மாவட்டச் செயலா் செல்வராஜ் தலைமை வகித்து, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தொழிலாளா்களுக்கு தலா ரூ. ஆயிரம் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகைப் பொருள்களும், ரூ.200 மதிப்பிலான முகக்கவசங்களும் வழங்கப்பட்டன.
இதில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோவில்பட்டி வட்டத் தலைவா் குணசீலன், பொருளாளா் கருப்பசாமி, கயத்தாறு வட்டாரச் செயலா் தங்கப்பாண்டி, புதூா் வட்டாரச் செயலா் கலையுடையாா், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் மகேந்திரன், முன்னாள் மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் ஸ்ரீதரன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினா் ராஜையா, ஜெயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.