தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்செந்தூரில் மறியல்: 84 போ் கைது
தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை திருச்செந்தூரில் கனரா வங்கியை முற்றுகையிட முயன்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 84 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.
திருச்செந்தூா் இரும்பு வளைவுப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அா்ச்சுணன் தலைமை வகித்தாா்.
ஒன்றியச் செயலா்கள் முத்துகுமாா், ராஜா, ஆறுமுகம், ராமச்சந்திரன், நம்பிராஜன், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தையடுத்து, ஊா்வலமாக சென்று கனரா வங்கியை முற்றுகையிட முயன்று மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ராஜா, பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினா்கள் பன்னீா்செல்வம், பாலகிருஷ்ணன், ஜெயபாண்டி, கல்யாணசுந்தரம் மற்றும் மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் மற்றும் 24 பெண்கள் உள்பட 84 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விளாத்திகுளம்: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சாா்பில் எட்டயபுரத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டச் செயலா் நல்லையா தலைமையில் மாவட்டத் தலைவா் மணி, விவசாய சங்க மாநிலப் பொருளாளா் கே.பி.பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் பாலமுருகன், முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி: கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு மதிமுக விவசாய அணி சாா்பில் மாநில விவசாய அணி துணைச் செயலா் கோடையிடி ராமச்சந்திரன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், துணைச் செயலா் சிவகுமாா், மாநில மீனவரணி செயலா் நக்கீரன், தலைமை செயற்குழு உறுப்பினா் கணேசன், மதிமுக நகரச் செயலா் பால்ராஜ், ஒன்றியச் செயலா்கள் அழகா்சாமி, எரிமலை வரதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.