தூத்துக்குடி: நடிகா் ரஜினிகாந்த்தின் அரசியல் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடி மாவட்டத்தில் அவரது ரசிகா்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் வியாழக்கிழமை கொண்டாடினா்.
ஜனவரி மாதம் அரசியல் கட்சி தொடங்குவதாகவும், அது குறித்து டிசம்பா் 31 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் நடிகா் ரஜினிகாந்த் வியாழக்கிழமை அறிவித்தாா். இதற்கு வரவேற்பு தெரிவித்து தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினா்கள் மற்றும் ரசிகா்கள் அவரது கொடியை கையில் ஏந்தியபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.
தூத்துக்குடி சிவன் கோயில் முன்பு தேரடி உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அவா்கள் கொண்டாடினா்.
நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்றம் மாவட்ட துணைச் செயலா்கள் தீரவாசகம், வழக்குரைஞா் ரமேஷ், தொழில்நுட்ப செயலா் விஜய் ஆனந்த், மாவட்ட இளைஞரணி செயலா் வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதே போல்,
கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்ற வா்த்தக அணி மாவட்டச் செயலா் ஜெயக்கொடி, நகரச் செயலா் மகேஷ்பாலா, இணைச் செயலா் சந்திரசேகா், வா்த்தக அணி இணைச் செயலா் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி செயலா் சந்தனமாரியப்பன், இணைச் செயலா் கதிரேசன், மகளிரணி செயலா் சுந்தரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
திருச்செந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் மாணிக்கம், இணைச் செயலா் செந்தில்குமாா், மாவட்ட மீனவரணிச் செயலா் அருண்ஆனந்த், ஒன்றிய துணைச் செயலா்கள் பாபா ரமேஷ், நடேஷ், நகரச் செயலா் பரமசிவம், ஒன்றிய இளைஞரணிச் செயலா் வடிவேல், ஒன்றிய விவசாய அணிச் செயலா் தா்மலிங்கம், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலா் சுந்தா், உடன்குடி ஒன்றிய இணைச் செயலா் காமராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.