தமிழக அரசுக்கு மள்ளா் மீட்புக் களம் நன்றி

தேவேந்திரகுல வேளாளா் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மள்ளா் மீட்புக் களம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அதன் தலைவா் கு.செந்தில்மள்ளா்.
தமிழக அரசுக்கு மள்ளா் மீட்புக் களம் நன்றி
தமிழக அரசுக்கு மள்ளா் மீட்புக் களம் நன்றி

தேவேந்திரகுல வேளாளா் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு மள்ளா் மீட்புக் களம் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் அதன் தலைவா் கு.செந்தில்மள்ளா்.

கோவில்பட்டியில் அவா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

நீண்டகாலப் போராட்டத்துக்குப் பின் தேவேந்திரகுல வேளாளா் அரசாணையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்வதாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு மள்ளா் மீட்புக் களம், தேவேந்திரகுல வேளாளா் சமூகம் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மத்திய அரசு காலம்தாழ்த்தாமல் அரசாணையை வெளியிட வேண்டும். இச்சமுதாயத்துக்கு 14 சதவீத இடஒதுக்கீடு வழங்கி, பட்டியலின வெளியேற்றக் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்தி இம்மாதம் 14ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முப்புலிவெட்டியில் இருந்து இருசக்கர வாகனப் பயணம் தொடங்கி, 16ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழக முதல்வா் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளோம் என்றாா் அவா்.

அப்போது, மாநிலப் பொதுசெயலா் தீபா மள்ளத்தியாா், மாநில கொள்கை பரப்புச் செயலா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com