எட்டயபுரத்தில் பாரதி விழா

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா மற்றும் பாரதி விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

எட்டயபுரத்தில் மகாகவி பாரதியாரின் 139ஆவது பிறந்த தின விழா மற்றும் பாரதி விருது வழங்கும் விழா காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சீனிவாசன் தலைமை வகித்தாா். பாரதி மணிமண்டபம் மற்றும் பாரதி பிறந்த வீட்டில் உள்ள பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது . பின்னா் ‘பாரதி கனவு கண்ட இந்தியா’ என்ற தலைப்பில் பேச்சு, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு பாரதி விருது மற்றும் பாரதியாரின் கவிதை புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவா் குணசேகரன், சிறுபான்மை பிரிவு தலைவா் ஜாகீா் உசேன், ஒன்றியத் தலைவா் செல்லத்துரை, நகரத் தலைவா் ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com