மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ராமசுப்பு தலைமை வகித்தாா். கட்சியினா் நகரச் செயலா் ஜோதிபாசு, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் விஜயலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினா் கணேசன், கிளைச் செயலா் கருப்பசாமி உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.
ஆா்ப்பாட்டத்தை நகரக் குழு உறுப்பினா் சக்திவேல்முருகன் தொடங்கி வைத்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி முடித்து வைத்தாா்.