கோவில்பட்டி, கயத்தாறில் எம்.ஜி.ஆர். நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து

கோவில்பட்டி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி மற்றும் கயத்தாறில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்துக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, கயத்தாறில் பிரதான சாலை, பால்பண்ணை அருகே உள்ளிட்ட 3  இடங்களில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி சத்யா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தங்கமாரியம்மாள் தமிழ்செல்வன், சந்திரசேகர், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வினோபாஜி, அன்புராஜ், அய்யாத்துரைப்பாண்டியன், நகரச் செயலர் விஜயபாண்டியன், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலர் செல்வகுமார், பொருளாளர் வேலுமணி, முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் லட்சுமணப்பெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலர் சுப்புராஜ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் துறையூர் கணேஷ்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல, எம்.ஜி.ஆர். சேவா சங்கம் சார்பில் கோவில்பட்டி ரயில் நிலையம் அருகில் சேவா சங்க நகரத் தலைவர் முகம்மது

உசேன், மாவட்டச் செயலர் தங்கராஜ், நகரச் செயலர் முருகன் ஆகியோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்க முன்னாள் மாவட்டப் பொருளாளர் மலையாண்டி முடிகாணிக்கை செலுத்தினார். அவருக்கு அமைச்சர் வேஷ்டி, சட்டை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com