சிறு மருத்தகம் அமைக்க வலியுறுத்தி மக்கள் போராட்டம்

மீரான்குளத்தில் அம்மா சிறு மருந்தகம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
sat23mini_2312chn_38_6
sat23mini_2312chn_38_6

மீரான்குளத்தில் அம்மா சிறு மருந்தகம் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளத்தில் சிறு மருந்தகம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென வேறு கிராமத்தில் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்ாக கூறப்படுகிறது.

இதற்கு இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து துணை சுகாதார நிலையம் முன் புதன்கிழமை திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, ஏற்கெனவே திட்டமிட்டபடி மீரான்குளத்தில் சிறு மருந்தகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், நெடுஞ்சாலைத் துறை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ், ஓய்வுபெற்ற அஞ்சலகா் செல்வராஜ், ஊராட்சி முன்னாள் தலைவா் ராஜகனி, திமுக பிரமுகா்கள் அதிசயராஜ், அப்டாப் சில்வான்ஸ், நெல்சன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com