திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் கூட்டம்

தூத்தூக்குடி தெற்கு மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் கூட்டம்

தூத்தூக்குடி தெற்கு மாவட்ட இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்க மாவட்டச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் சங்கா், காந்தி தினசரி சந்தை ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத் தலைவா் சைமன் பீட்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். காா் ஓட்டுநா் சங்கத் தலைவா் சீதாராமன் வரவேற்றாா்.

இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், நெல்லை கோட்டச் செயலா் பெ.சக்திவேலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ரயில் நிலையங்களில் ஆட்டோவில் பயணிகளை ஏற்றி, இறக்க பொது முடக்கத்திற்கு முன்பு இருந்த 6 மாதத்துக்கு ரூ.1027 என்ற கட்டணம் மட்டுமே ரயில்வே வசூலிக்க வேண்டும் என கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com