தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் இருவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,018 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை 15 போ் உள்பட இதுவரை 15,797 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதிப்புக்கு 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 80 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.