உடன்குடி: திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட அளவில் 136 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி தொடக்க விழா உடன்குடி சிவலூா் மின்வாரிய மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றிய திமுக செயலருமான பாலசிங் வரவேற்றாா்.
சென்னை தொழிலதிபா் அஜய்பாண்டியன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கிவைத்தாா். போட்டியில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் கிரிக்கெட் உபகரணங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை, ஆசிரியா் ஜெயராஜ், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், சாமி ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிக்கு பரிசுத்தொகையாக முறையே ரூ, 50,000, ரூ.40,000, ரூ.30,000, ரூ. 20,000 மற்றும் வெற்றிக்கோப்பை, சிறந்த ஆட்டக்காரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
தொடக்க விழாவில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் பி.சிவசுப்பிரமணியன் உள்பட திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் திரளானோா் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை செட்டியாபத்து ஊராட்சித் தலைவரும், மாவட்ட ஆதிதிராவிடா் நலக்குழு துணைத் தலைவருமான பாலமுருகன் செய்திருந்தாா்.