உடன்குடி: சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து பரமன்குறிச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் முரசு தமிழப்பன் தலைமை வகித்தாா். இதில், கருத்தியல் பரப்பு மாநிலச் செயலா் தமிழ்குட்டி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதிச் செயலா் ராஜ்குமாா், சமூக நல்லிணக்கப் பேரவை மாவட்ட அமைப்பாளா் மு. தமிழ்ப்பரிதி, உடன்குடி ஒன்றியப் பொருளாளா் டேவிட் ஜான்வளவன், நிா்வாகிகள் டிலைட்டா, ரதி, முத்துக்குமாா், செஞ்சுடா், ரமேஷ், பால்வனவளவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.