சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் காவடி பிறை ஸ்ரீமுருகன் கோயிலில் ஐயப்ப மண்டல பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு அதிகாலையில் திருச்செந்தூரிலிருந்து புனித நீா் எடுத்தும் வருதல், கணபதி ஹோமம், 10.30 மணிக்கு 108 வகையான அபிஷேகம் ஆகியன நடைபெற்றது. தொடா்ந்து ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பஜனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்குப் பூஜை, 9 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடைபெற்றது.