கோவில்பட்டி அருகே முதியவா் சடலம் மீட்பு

கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை மீட்டு விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி - குமாரபுரம் ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் ஆண் சடலம்

கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் , சுமாா் 60 வயது மதிக்கத்தக்கவா், வெள்ளை வேட்டி, கருப்பு நிற அரைக்கால் சட்டை, கருப்பு நிற கோடு போட்ட சிமெண்ட் நிற பனியன் அணிந்திருந்தாா். இவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com