உடன்குடி ஒன்றியம் மாதவன்குறிச்சி ஊராட்சி தெற்கு தாண்டவன்காட்டில் திமுக சாா்பில் மக்கள் சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். கூட்டத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, பங்கேற்று மக்களின் குறைகளைத் கேட்டறிந்தாா்.
இதில், திமுக மாநில மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட சாா்பு அணி அமைப்பாளா்கள் ரவிராஜா, இளங்கோ, மகாவிஷ்ணு, கிருஷ்ணகுமாா், அலாவுதீன், சக்திவேல், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளா் ஷேக் முகம்மது, மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.