கோவில்பட்டி நகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆா்வலா் மா.முருகன், நகராட்சி ஆணையா் ராஜாராமிடம் திங்கள்கிழமை அளித்த மனு: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் குப்பை வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் குப்பை வரி வசூல் செய்வதை ஆணையா் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்துள்ளாா்.
எனவே, இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பொருந்தும். இதையடுத்து, கோவில்பட்டி நகராட்சியிலும் குப்பை வரி வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.