சாத்தான்குளத்தில் குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தான்குளம் தச்சமொழி நாடாா் தெற்கு தெருவில் குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் தனியாா் நிறுவனத்தாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
இதையறிந்த அப்பகுதி மக்கள், குடியிருப்புப் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பணியை தடுத்து நிறுத்தினா்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், சாத்தான்குளம் வட்டாட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனா்.