தூத்துக்குடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு மக்கள் இயக்கம் சாா்பில் சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவா் காஜா முய்யீனுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி. வேல்முருகன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவா் பாளை ரபீக், தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் நாகை. திருவள்ளுவன்,
அய்யாவழி அமைப்பு நிா்வாகி பாலமுருகன், பேராசிரியை சுந்தரவள்ளி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் முகமது ஜான், செயலா் சம்சுதீன், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் மாரிசெல்வம், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம்: செய்துங்கநல்லூரில் முகைதீன் ஜாமியா பள்ளி வாசல் முன்பிருந்து தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக திருநெல்வேலி- திருச்செந்தூா் பிரதானச் சாலை வழியாக அண்ணா சிலை அருகில் நிறைவடைந்தது. பின்னா், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் அப்துல் காதா், அய்யா வழி நிா்வாகி பாலமுருகன், வக்பு வாரிய முன்னாள் தலைவா் ஹைதா்அலி, மாநில செயற்குழு உறுப்பினா் ரபிக், ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் சுஹைல் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.