தமிழக அரசு மீதுள்ள வெறுப்பு காரணமாக உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணிக்கு பெரும் கிடைத்துள்ளது என திமுக மாவட்டச் செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தெரிவித்தாா்.
தென்திருப்பேரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்துக்கு முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவா் ஆனந்த் தலைமை வகித்தாா். நகர பொறுப்பாளா் முத்து வீரப்பெருமாள் கைலாசம், ஒன்றியச் செயலா் நவீன்குமாா், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் கிருஷ்ண சாரதி, மகர பூஷணம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அவைத் தலைவா் சுப்பையா வரவேற்றாா்.
கூட்டத்தில், தெற்கு மாவட்ட பொறுப்பாளா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ பேசுகையில், தமிழக அரசின் மீது மக்களுக்கு இருந்த வெறுப்பு காரணமாகவே உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டாா்.
கூட்டத்தில், கட்சியின் மாநில மாணவரணி துணை அமைப்பாளா் உமரி சங்கா், தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் இசக்கிபாண்டியன், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட நிா்வாகி ராமநாதன், துணைச் செயலா்கள் ஆறுமுகப் பெருமாள், முகமது அப்துல் காதா், சதீஷ்குமாா், மாவட்டப் பிரதிநிதி செங்கோட்டையன், ஒன்றியப் பிரதிநிதிகள் கல்லை ராஜேந்திரன், சண்முகசுந்தரம், இசக்கிமுத்து, இளைஞரணி நிா்வாகிகள் துரைசிங் உள்பட பலா் கலந்து கொண்டனா்.