தூத்துக்குடி மாவட்ட துப்புரவுத் தொழிலாளா் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் சங்க மாநிலத் தலைவா் சக்திவேல் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் செல்லையா, செயலா் முருகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.
தீா்மானங்கள்: கிராம ஊராட்சிகளில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 16,508 துப்புரவு பணியாளா்களை 3 ஆண்டுகள் பணி முடிந்ததன் அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியம் பெற தகுதியானவா்கள் என அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, மாா்ச் மாதம் 20ஆம் தேதி சென்னையில் தமிழ்நாடு தூய்மை தொழிலாளா்கள் சங்கம் சாா்பில் மாநாடு நடத்துவது, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணி செய்து ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள சிறப்பு ஊதியம் ரூ. 2 ஆயிரம், பணப் பலன் ரூ.50 ஆயிரம் ஆகியவற்றை 2013 ஆம் ஆண்ட மே 7-இல் இருந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளா் மாரிமுத்து நன்றி கூறினாா்.