கீழஈரால் தொன்போஸ்கோ கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

கீழஈரால் தொன்போஸ்கோ கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரிச் செயலா் அமலஜெயராயன் தலைமை வகித்தாா். முதல்வா் பயஸ் மிசியா், கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடா்ந்து கவியரங்கம், கருத்தரங்கு, உரை வீச்சு, பட்டிமன்றம், இலக்கிய நூல்கள் திறனாய்வு மற்றும் கலாசார கலை நிகழ்ச்சிகள், தமிழா் நாகரிகம் எனும் தலைப்பில் வில்லிசைப் பாட்டு ஆகியன நடைபெற்றன.

விழாவில் அருள்தந்தை வளன் அரசு, எப்போதும்வென்றான் அரசு பள்ளி தலைமையாசிரியா் ராமசுப்பிரமணியன், எழுத்தாளா் இளசை மணியன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பேராசிரியா் தெய்வரத்தினா வரவேற்றாா். பேராசிரியா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com