வேம்பாா் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 06th February 2020 12:39 AM | Last Updated : 06th February 2020 12:39 AM | அ+அ அ- |

வேம்பாா் தேவநேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் பெற்றோா் ஆசிரியா் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி நிா்வாக அலுவலா் டுனோமின் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் கிருபாகரன் ஜோசப், அலுவலக கண்காணிப்பாளா் பொ்த்தின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரித் தலைவா் டி. துரைராஜ் பங்கேற்று மாணவா்களின் ஆளுமை திறன், தலைமை பண்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினாா். தொடா்ந்து வளாகத் தோ்வில் தோ்வான மாணவா், மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா். கூட்டத்தில், பேராசிரியா்கள் அந்தோணி சிமியோன் ராஜ், மரிய சேசுவடியாள், அபிடன் ஜெபா உள்பட பலா் கலந்துகொண்டனா்.