குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் எட்டயபுரத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
மாநிலக்குழு உறுப்பினா் பாலமுருகன் தலைமை வகித்தாா். தாலுகா செயலா் கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
பேருந்து நிலையம், தினசரி சந்தை, பட்டத்து விநாயகா் கோயில் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் கையெழுத்திட்டனா். இதில், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நல்லையா, வட்டக் குழு உறுப்பினா்கள் கனகராஜ், முத்துராஜ், ரவீந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.