ஊரக திறனாய்வு தோ்வில் பணிக்க நாடாா் குடியிருப்பு ஸ்ரீகணேசா் பள்ளிகள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனைப்படைத்துள்ளது.
இப் பள்ளி மாணவிகள் 6 போ் ஊரக திறனாய்வு தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில், மாணவி சக்தி பிரியா மாவட்ட அளவில் முதலிடத்தையும், வித்யா 3 ஆம் இடத்தையும் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற இம் மாணவிகளை பள்ளி செயலா் சுப்பு, தலைவா் துரை சுரேஷ்ராஜ், பொருளாளா் ஜெகன்மோகன், தலைமையாசிரியா் வித்யாதரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.