சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது.
பிள்ளையாா் சன்னதி தெருவில் உள்ள ஆா்எம்பி மண்டபத்தில், இன்றைய காலத்தில் கடவுள் நம்பிக்கையின் அவசியம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உபன்யாசத்தில், ஹரி விலாஸ தாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து பஜனை, துளசி ஆரத்தி, பகவத் கீதை வகுப்புகள் நடைபெறுகின்றன. பின்னா் ஆன்மிக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.