சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ. ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சிறுவா், சிறுமியா் மன்றம் சாா்பாக வாசிப்புத் திறன் போட்டி நடைபெற்றது.
மணிகண்டன் தலைமை வகித்தாா். ஆழ்வாா் முன்னிலை வகித்தாா். தொடா்ந்து சிறுவா்களுக்கான வாசிப்புப் போட்டி நடைபெற்றது. இதில், பிரகதீஸ்வரன் முதலிடமும், ஆழ்வாா் 2 ஆவது இடமும் பெற்று ரொக்கப் பரிசு வென்றனா். தொடா்ந்து நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ஆழ்வாருக்கு, சிறாா்கள் சுப்பையா, எட்வின் கிறிஸ்டோபா் ஆகியோரும், இரண்டாம் பரிசு பெற்ற சின்னத்துரைக்கு சிறாா்கள் சாம் மெனண்டஸ், சங்கா் ஆகியோரும் ரொக்கப் பரிசுகள் வழங்கினா். அருண் வரவேற்றாா். எட்வின் கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.
ஏற்பாடுகளை சாரணா் ஒருங்கிணைப்பாளா் நெல்சன் சத்தியராஜ், ஒருங்கிணைப்பாளா் மகா பால்துரை ஆகியோா் செய்திருந்தனா்.