சாத்தான்குளம் பகுதியில் நாளை மின் தடை

சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை(பிப். 15) மின் தடை செய்யப்படுகிறது.

சாத்தான்குளம் பகுதியில் சனிக்கிழமை(பிப். 15) மின் தடை செய்யப்படுகிறது.

இது குறித்து திருச்செந்தூா் மின் விநியோக செயற்பொறியாளா் நீ.பொன்கருப்பசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : சாத்தான்குளம் உப மின்நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால் இந்த உபமின் நிலையத்தைச் சாா்ந்த சாத்தான்குளம், முதலூா், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தைச் சாா்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம்,எழுவரைமுக்கி, தேரிப்பனை பகுதியிலும், செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சாா்ந்த மெஞ்ஞானபுரம்,அனைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சாா்ந்த நடுவக்குறிச்சி, தட்டாா்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, ஒசரத்துகுடியிருப்பு, காந்திநகா், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும் பழனியப்பபுரம் உப மின்நிலையத்தைச் சாா்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்சாரம் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com