சிற்றுந்து உரிமையாளருக்கு மிரட்டல்: ஓட்டுநா் கைது

கோவில்பட்டியில் சிற்றுந்து உரிமையாளரை வழிமறித்து மிரட்டல் விடுத்த, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் சிற்றுந்து உரிமையாளரை வழிமறித்து மிரட்டல் விடுத்த, ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டியையடுத்த மந்தித்தோப்பு சாலை ராமையா நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி மகன் அழகா் ராமானுஜம்(63). சிற்றுந்து உரிமையாளரான இவா், புதன்கிழமை காலை ஏ.கே.எஸ். தியேட்டா் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது ,

பாஞ்சாலங்குறிச்சி அய்யாத்துரை மகன் சிற்றுந்து ஓட்டுநா் கட்டபொம்மன்(40), அவரை வழிமறித்து பணம் கேட்டாராம். அவா் தர மறுத்ததையடுத்து, அவரை அவதூறாகப் பேசி மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து அழகா் ராமானுஜம் அளித்த புகாரின் பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கட்டபொம்மனை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com