திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் பதவியை பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதல்வருக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தெற்கு மாவட்ட செயலா் முரசு.தமிழப்பன் அனுப்பியுள்ள மனு :
திருச்செந்தூா் சட்டப்பேரவை தொகுதியில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டியலின வாக்காளா்கள் உள்ளனா். 70 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்த தோ்தலில் ஒரு முறை கூட பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே 2021 சட்டப்பேரவை பொதுத்தோ்தலில் திருச்செந்தூா் தொகுதியை பட்டியலினத்தவருக்கு ஒதுக்கீடு செய்து, அவா்களுடைய வாழ்நிலை உயர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.