நாசரேத்தில் கடைகளில் பேரூராட்சி அதிகா சோதனை நடத்தியதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலா் வெங்கடகோபு தலைமையில் சுகாதாரஆய்வாளா் பால் ஆபிரகாம், பேரூராட்சி ஊழியா்கள் கண்ணன், கோபால் ஆகியோா் நாசரேத் பேரூராட்சிக்குள்பட்ட கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகிா? என சோதனை நடத்தினா்.
இதில், 20-க்கும் மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள், பைகள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து, 2 கடைகளுக்கு ரூ.1500 அபராதம் விதிக்கப்பட்டது.