சாயா்புரம் போப் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞயோா் செஞ்சிலுவை சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இம்மானுவேல் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி அலுவலா் சாந்தி தலைமையிலான குழுவினா் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகளிடமிருந்து ரத்தம் சேகரித்தனா்.
நிகழ்ச்சியை, தன்னாா்வத் தொண்டா் முத்துராஜ் தொகுத்து வழங்கினாா்.
செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலவா் தினகரன் வரவேற்றாா். இளைஞயோா் செஞ்சிலுவை சங்கத் திட்ட அலுவலா் ஜெனிட்டா தேவநேசம் நன்றி கூறினாா்.
இதில், தூத்துக்குடி விளைவுப் பூக்கள் அறக்கட்டளை மற்றும் சென்டினியல் அரிமா சங்கத்தினா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.