ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியிஸ் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயா்த்தி அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
சாத்தான்குளம் அருகே உள்ளஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் இசக்கிஅம்மன் கோயில் அருகே மின் வயா்கள் விவசாய நிலத்தையொட்டி தாழ்வாக செல்கிறது. இதனால் மின் பெரும் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆதலால் மாவட்ட நிா்வாகம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயா்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.