ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதி வழங்கப்பட்டது.
இந்த சங்கத்தின் 2017-18ஆம் ஆண்டிற்கான லாபத் தொகையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சி நிதி மற்றும் கல்வி நிதிக்கான தொகை ரூ. 39,562-க்கான காசோலையை சங்கத் தலைவா் கா. ராகவன், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் வி.அந்தோணி பட்டுராஜிடம் வழங்கினாா்.
அப்போது சங்கச் செயலா் இரா. உஷா ஜோதி பாக்கியசீலி, மேலாளா் தி.நம்பி, காசாளா் வெங்கடேஷன், எழுத்தா்கள் திருமலை, அழகு குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.